Friday, July 11, 2008

தனிமனித ஒழுக்கம்


நாம் முதலில் ஒழுக்கத்தை பற்றி பார்ப்போம் , ஒழுக்கமென்பது நிச்சயமாக பிறருக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்வதே ஆகும். இரண்டு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று பிறரை உடல் ரீதியாக பாதிப்பது மற்றொன்று மனரீதியாக பாதிப்பது. முதலில் சொன்னதாவது பலமுள்ள ஒருவன் பலவீனமாணவனை அடிப்பது போன்று. இரண்டாவது சொன்னதானது பிறரை வாய் பேச்சால் மனதை புண்படுத்துவதாகும். இவ்விரண்டும் நடக்காமல் இருப்பதென்பது சாத்தியமற்றது. ஏனெனில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் இருக்கும்வரை ஒருவன் ஆதிக்கம் செலுத்துவது நிச்சயம். இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று நான் சொன்னது பணத்தில் மட்டுமல்ல அனைத்திலுமே இரண்டு வகை உண்டு அல்லவா அதை குறிப்பிட்டேன். தனிமனிதன் எங்கெங்கெல்லாம் ஒழுக்கமாக இருக்கவேண்டுமென்று எவ்வளவோ உதாரணம்கள் இருக்கின்றன. பெண் ஆணிடம், ஆண் பெண்ணிடம், மகன் தந்தையிடம், பெற்றோர்கள் குழந்தைகளிடம், பெரியோர்கள் சிரியோர்களிடம், மாணவர்கள் பெரியோர்களிடம் , என்று இன்னும் எத்தனையோ. அதில் ஒன்றானது ஒரு கல்லூரி மாணவன் தனியாக வீதியில் அல்லது பேருந்தில் செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம் , அப்போது அவன் எந்த பெண்ணையும் கிண்டல் செய்வதில்லை , எந்த பெரியவரையும் கேலி செய்வதில்லை , பிற மாணவர்களிடம் வம்பு சண்டைக்கு போவதில்லை. அதே மாணவன் தன் சகமாணவர்களுடன் சேர்ந்து அதே போல் வீதியிலோ அல்லது பேருந்திலோ செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவன் மேற்சொன்ன அனைத்தையும் செய்வான் சந்தேகமின்றி. அப்பொழுது தனிமனிதனாக இருக்கும் போது அவனிடம் இருந்த ஒழுக்கம் கூட்டமாக இருக்கும் போது இருப்பதில்லை. அது இயல்பும் கூட. இது அனைத்து மாணவர்களும் செய்வதே. அதற்க்காக கூட்டமாக இருக்கும் போதும் ஒழுக்கமாக இருக்கும் மாணவர்கள் இல்லாமலில்லை. தனிமனிதனாக இருக்கும்போது ஒழுக்கத்தை கடைபிடிப்பது சுலபம். கூட்டமாக இருக்கும் போது கடைபிடிதீர்கலானால் பிறருக்கு அது சொவ்கர்யமாக இருக்கும்.

இறுதியாக, தனிமனித ஒழுக்கமென்பது பிறரை ஆனந்தமாக வைத்துக்கொள்வது அல்ல. பிறருக்கு தொல்லை தராமல் நம் வாழ்க்கையை ஆனந்தமாக கொண்டுசெல்வதே ஆகும். ஒவ்வொரு தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமாகமாறி நாது நலம் பெரும்.

No comments: