
வசதிபடைத்தவர்கள் பொருட்க்கள் வாங்கும் இடங்களிலெல்லாம் கணினி மூலம் ரசீது கட்டாயம் கொடுத்து விடுவார்கள். இவர்களும் கட்டாயம் வாங்கிக்கொள்வார்கள். நடுத்தர மக்களில் சிலர் எதை வாங்கினாலும் கடைக்காரரிடமிருந்து ரசீது வாங்கிக்கொள்வார்கள், ஆக இவ்விருவருக்கும் இக்கட்டுரை தேவைபடாது. பொருட்க்களை வாங்கி அதற்க்குண்டான பணத்தையும் கொடுத்து ரசீது வாங்க விரும்பாத அல்லது அதை வாங்கினால் என்ன ஆகிவிடபோகிறது என்று நம்மில் பலபேர் நினைப்பதுண்டு. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் மருந்து வாங்கும் கடைகளில் நாம் அனைவரும் மருந்து சீட்டு கொடுக்கிறோம் அதில் உள்ள அனைத்து மருந்தும் கடைக்காரன் கொடுக்கிறான், நீங்கள் அதற்க்கு நிகரான பணம் கொடுக்கிறீர்கள் பிறகு அந்த மருந்து சீட்டையும் மருந்தையும் வீட்டுக்கு கொண்டு போகிறீர்கள். மருந்துகளுக்கு நீங்கள் கொடுத்த பணத்திற்கு ரசீது வாங்குவதில்லை . இது உதாரணம் மட்டுமே. இதுபோல எத்தனையோ இடங்களில் நாம் ரசீதுகளை வாங்க மறந்துவிடுகிறோம். நான் ரசீது வாங்கவில்லை எனக்கு அது தேவையும் இல்லை இதனால் நாட்டிற்கு என்னவாயிற்று என்று நீங்கள் கேட்க்கலாம். நீங்கள் வாங்கிய போருட்க்களுக்கு ரசீது வாங்கவில்லை என்றால் அது கணக்கில் வராது. கணக்கில் வரவில்லை என்றால் அரசாங்கத்துக்கு முழுமையாக வரவேண்டிய வரிப்பணம் குறைந்துவிடும் . அரசாங்கத்துக்கு வரிப்பணம் வரவில்லை என்றால் போகட்டும் எனக்கென்ன என்கிறீர்களா , வரிப்பணத்தை கொண்டுதான் அரசாங்கம் மக்களின் தேவியாகளை பூர்த்தி செய்யவேண்டியிருக்கிறது. இது ஒன்றும் கடினமான காரியமொன்றும் அல்லவே காசு கொடுக்கிறோம் பொருட்க்களை வாங்கிறோம் அதற்க்குண்டான ரசீது கேட்க்கிறோம். எந்த கடைக்காரனும் ரசீது தரமுடியாது என்று சொல்வானா, நிச்சயம் மாட்டான். நீங்கள் கேட்க்கவில்லை அதுதான் உண்மை.
ஆகையால் கேளுங்கள் கேளுங்கள் ரசீது கேளுங்கள்.
ஆகையால் கேளுங்கள் கேளுங்கள் ரசீது கேளுங்கள்.


No comments:
Post a Comment