Saturday, June 21, 2008

குழந்தைகளும் புத்தக மூட்டையும்

















விடுமுறை
முடிந்து அனைவருக்கும் பள்ளிகள் கல்லூரிகள் திறந்து விட்டன. வீதிகளில் எங்கு பார்த்தாலும் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லும்கூட்டம் தென்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் என்னை பாதித்த ஒன்றானது ஒரு சிறுவன் ஒன்றிலிருந்து மூன்றாம் வகுப்பு படிக்கும் பருவம்தான். தன் முதிகில் ஒரு மூட்டையை சுமந்துக்கொண்டு வளைந்து நெளிந்து ஒடமுயற்சிக்கிறான் அந்த சுமை அவனை நடக்கத்தான் அனுமதித்தது. அந்த சுமையானது அவன் வயதுக்கும், உடலுக்கும் மீறியது. சுமை சுமை என்று நான் சொன்னது புத்தகங்களைத்தான். புத்தகங்கள் எப்படி சுமை ஆகலாம் என்று நீங்கள் கேட்க்கலாம் பொதுவாக சிறுவர்கள் பள்ளிகளுக்கு போகவேண்டுமேன்றாலே மிகப்பெரிய சங்கடம் அவர்கள்ளுக்கு தாய் தந்தை அழுத்தத்தினால்தான் குழந்தைகள் பள்ளிகளுக்கு போக காரணம் மற்றபடி குழந்தைகள் விருப்பப்பட்டு அல்ல. அவர்கள் பள்ளிக்கு போவதையே முழுமனதோடு செய்வதில்லை அதிலும் அத்தனை சுமையை சுமந்துகொண்டு என்றால் யோசித்துப்பாருங்கள். அதற்க்காக பள்ளிக்கு போகவேண்டாமா படிக்கவேண்டமா என்றுதானே உங்கள் அடுத்தக்கேல்வி, நிச்சயமாக பள்ளிக்குப்போகவேண்டும் நன்றாக படிக்கவேண்டும் கூட. நான் சொல்ல விரும்பியது ஒன்றுதான் இக்குழந்தைகள் சுமந்துக்கொண்டு போகும் அத்தனை புத்தகங்களுக்கும் பள்ளியில் பாடம் எடுக்கப்போவதில்லை அதில் பாதிக்குத்தான் வேலை மிச்சமுள்ள புத்தகங்கள் இவர்களுக்கு சுமையாக வந்தவைதான். சரி அதற்க்கு நாம் என்ன செய்யவேண்டும் , நீங்கள் வெளிநாடுகளில் பள்ளிகளில் பார்த்தீர்களானால் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் மற்றும் இதர படிப்பு சம்பந்தப்பட்ட வஸ்துக்களை வைப்பதற்க்காக பாதுகாப்பு பெட்டி (லாக்கர் என்போமே அதுதான் )போன்று ஒன்றை அவர்களுக்கு குடுக்கிறார்கள். அதில் அவர்கள் தங்கள் பொருட்க்களை வைத்துக்கொண்டு வேண்டியதை பள்ளிகளுக்கும் வீட்டிற்கும் கொண்டுசெல்வார்கள், நான் சொன்ன பாதி சுமை பள்ளிகளில் பத்திரமாக இருந்துவிடும் , நம் பிள்ளைகளின் முதிகில் ஏறி கழுத்தை நேரிக்கது. இதற்க்கு தீர்வு என்பது நாம் எடுக்கும் முயற்சியில்தான் இருக்கிறது. புத்தகங்களை பள்ளிகளில் வைத்து தேவையான புத்தகங்களை மட்டும் உபயோகபடுத்தும் வசதியை கொண்டு வாருங்கள் என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும், உங்கள் பிள்ளை பள்ளி என்றால் புத்தகங்கள் சுமக்க வேண்டுமே என்ற பயம் நீங்கி பள்ளியை நோக்கி நடக்கக்கூடாது ஓடவேண்டும் . பள்ளிகளிலும் இதுபோன்ற நல்ல திட்டங்களை உருவாக்கி குழந்தைகளுக்கு படிப்பு பாரமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Friday, June 20, 2008

கனவுகாண்க நாடுநலம்பெற வேண்டுமென்று கனவுகாண்க.



நாடு நலம்பெற வேண்டுமென்று கனவு கண்டால்மட்டும் போதுமா அது நடந்தேறிட உழைக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனின் உண்மையான உழைப்பும் நாடு வலம் பெற்று நலம்பெற உதவும்.

உழைப்போம், உயர்வோம்.

ஜெய் ஹிந்த்.