நாம் செல்லும் சில இடங்களில் அல்லது சில பொழுதுபோக்கும் இடங்களில் பிச்சை எடுக்கும் சிலர் நிச்சயமாக இருப்பார்கள். அவர்கள் அங்கு இருக்கும் அனைவரிடமும் பிச்சை கேட்ப்பார்கள் ஒருவரையும் விடமாட்டார்கள். ஒருசிலர் தன்னிடம் இருக்கும் சில்லறையில் ஐம்பது பைசாவில் இருந்துஒருரூபாய் வரை போடுவார்கள். நிச்சயமாக ஒரு ரூபாய் தாண்டாது. அவர்களிடம் இல்லை என்றால் இல்லை என்று சொல்லி நன்றாகவே அவர்களை அனுப்பிவிடுவார்கள். பெரும்பாலான மக்கள், எதற்காக பிச்சை எடுக்கவேண்டும் ஏதாவது வேலை செய்யலாமே அதனால் காசுபோடாதீர்கள் என்று சொல்லி தாங்களும் போடாமல் பிறரையும் தடுத்து விடுவார்கள். நாம்போடும் காசினால் அவன் சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்றும் அல்லது அந்தகாசை தப்பாக பயன்படுத்தி விடுவார்கள் என்றும் அவர்கள் நினைப்பது உண்டு. அதனால் கூட இவர்கள் பிச்சையை ஊக்குவிப்பதில்லை.
ஒன்றை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் ஒருவர் பிச்சை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறார் என்றால் அவர் எத்தனை துன்பங்களுக்கு ஆட்பட்டு இருக்கவேண்டும். யோசித்து பாருங்கள் நாம் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் பிச்சை எடுக்க மனம் வருமா, நிச்சயமாக வராது. அவர்கள் பிச்சை எடுக்க கூச்சப்படவில்லை என்றால் , அவர்கள்அவமானத்தில் மொத்தத்தையும் பார்த்துவிட்டார்கள் என்று பொருள். பிச்சை ஒன்றும் தப்பானகாரியமல்லவே , ஆதி காலத்தில் நாம் கடவுளாக போற்றும் முனிவர்கள் பலபேர் பிச்சை எடுத்துதான் தங்கள் வாழ்க்கையை கடத்தியிருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் பிச்சை நிச்சயமாகே வயிற்றுக்குத்தான். நாம் போடும் ஒருரூபாயில் அவர்கள் பணக்காரர்கலாகபோவதும் இல்லை, நாம் போடும் ஒரு ரூபாயால் நாம் ஏழையாக போவதும் இல்லை. சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்று நீங்கள் தராமல் இருந்தால் அவர்கள் நிறுத்திக்கொள்ள போவதும்இல்லை. அவர்கள் அடுத்தவனிடம் சென்று கேட்க்கத்தான் போகிறார்கள். நாம் வாரத்தில் ஒரு ஐந்துபேருக்கு ஒரு ரூபாய் விகிதத்தில் ஐந்து ரூபாய் தானம் செய்வோமா, நிச்சயமாக மாட்டோம். இங்கே நான் குறிப்பிட்டது அதிக தொகைதான். ஆகவே நாம் ஐம்பதுகாசுகள் குடுப்பது தப்பில்லை என்றுஎனக்கு தோன்றுகிறது. அதனால் அவன்பசி அடங்கும் என்றால் தாராளமாகதரலாம். யோசித்து பாருங்கள் எத்தனை ரூபாய்க்களை உபயோகமில்லாமல் செலவளிதுக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக கை தொலைபேசிக்கு எத்தனை செலவு, அதனை நீங்கள் உபயோகமாக பேசியிருப்பீர்களா. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் நாமாகசென்று யாருக்கும் தானம் செய்யபோவதில்லை. அதற்க்கு நமக்கு நேரமும் இருக்கபோவதில்லை. அவர்களாகவந்து கேட்க்கும்பொழுது சிறியதாககுடுத்து பெரியதாக ஆனந்தம் அடையலாமே.
இங்கு குறிப்பிட்டவை அனைத்தும் என்னுடைய கருத்துக்களே ஆகும். உங்கள்கருத்துக்களை எனக்கு தெரிவிக்கவும்.
ஒன்றை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் ஒருவர் பிச்சை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறார் என்றால் அவர் எத்தனை துன்பங்களுக்கு ஆட்பட்டு இருக்கவேண்டும். யோசித்து பாருங்கள் நாம் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் பிச்சை எடுக்க மனம் வருமா, நிச்சயமாக வராது. அவர்கள் பிச்சை எடுக்க கூச்சப்படவில்லை என்றால் , அவர்கள்அவமானத்தில் மொத்தத்தையும் பார்த்துவிட்டார்கள் என்று பொருள். பிச்சை ஒன்றும் தப்பானகாரியமல்லவே , ஆதி காலத்தில் நாம் கடவுளாக போற்றும் முனிவர்கள் பலபேர் பிச்சை எடுத்துதான் தங்கள் வாழ்க்கையை கடத்தியிருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் பிச்சை நிச்சயமாகே வயிற்றுக்குத்தான். நாம் போடும் ஒருரூபாயில் அவர்கள் பணக்காரர்கலாகபோவதும் இல்லை, நாம் போடும் ஒரு ரூபாயால் நாம் ஏழையாக போவதும் இல்லை. சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்று நீங்கள் தராமல் இருந்தால் அவர்கள் நிறுத்திக்கொள்ள போவதும்இல்லை. அவர்கள் அடுத்தவனிடம் சென்று கேட்க்கத்தான் போகிறார்கள். நாம் வாரத்தில் ஒரு ஐந்துபேருக்கு ஒரு ரூபாய் விகிதத்தில் ஐந்து ரூபாய் தானம் செய்வோமா, நிச்சயமாக மாட்டோம். இங்கே நான் குறிப்பிட்டது அதிக தொகைதான். ஆகவே நாம் ஐம்பதுகாசுகள் குடுப்பது தப்பில்லை என்றுஎனக்கு தோன்றுகிறது. அதனால் அவன்பசி அடங்கும் என்றால் தாராளமாகதரலாம். யோசித்து பாருங்கள் எத்தனை ரூபாய்க்களை உபயோகமில்லாமல் செலவளிதுக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக கை தொலைபேசிக்கு எத்தனை செலவு, அதனை நீங்கள் உபயோகமாக பேசியிருப்பீர்களா. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் நாமாகசென்று யாருக்கும் தானம் செய்யபோவதில்லை. அதற்க்கு நமக்கு நேரமும் இருக்கபோவதில்லை. அவர்களாகவந்து கேட்க்கும்பொழுது சிறியதாககுடுத்து பெரியதாக ஆனந்தம் அடையலாமே.
இங்கு குறிப்பிட்டவை அனைத்தும் என்னுடைய கருத்துக்களே ஆகும். உங்கள்கருத்துக்களை எனக்கு தெரிவிக்கவும்.